முதல்வர் பேச்சுக்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, August 3, 2018

முதல்வர் பேச்சுக்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்!



முதல்வர் பேச்சுக்கு ஆசிரியர்கள்

 சங்கம் கடும் கண்டனம்!







தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப் படுவதாக 
முதல்வர் தெரிவித்தமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தலைவர் செ.முத்துசாமி ExMLC,அவர்கள் முதல்வருக்கு எழுதியுள்ள திறந்த மடல்








CM-ன் பேச்சு - TNPTF பொதுச்செயலாளரின் கண்டன அறிக்கை*



🔥
🛡 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைத் தரக்குறைவாகவும், கண்ணியக் குறைவாகவும், அவமரியாதையாகவும் பேசியுள்ள செய்தி தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருங்கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

🔥
🛡 ஒரு மாநிலத்தின் சக்திவாய்ந்த, அதிகார பலம்மிக்க, பொறுப்புணர்வுமிக்க பதவிவகிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே இப்படிப் பேசியிருப்பது அந்த மாபெரும் பொறுப்பின் பெருமைக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

🔥
🛡 முதலமைச்சர் அவர்களின் பேச்சு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இழிவுபடுத்திவிட்டது என்பதைவிட, அவர் வகிக்கின்ற பொறுப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.

🔥
🛡 இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற்ற மாண்புமிகு முன்னாள் முதல்வர்கள் யாரும் பேசத்துணியாத வார்த்தைகளை இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்தி இருப்பது இதுவரை தமிழ்நாடு காணாத நிகழ்வாக அமைந்துவிட்டது.

🔥
🛡 மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது பேச்சில் குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களை குறிவைத்து தாக்கியிருப்பது என்பது ஆசிரியர் பணியின் மேன்மையைக் களங்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

🔥
🛡 "ஆசிரியர் ஏங்கினால், நாடு ஏங்கும்என்று கூறிய பேரறிஞர் அண்ணாவின் வழியில் வந்தவர்கள் ஆசிரியர்களை ஏங்க மட்டுமல்ல, கொந்தளிக்கவும் வைத்திருப்பது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எதிர்கால வரலாறு நமக்கு உணர்த்தும்.

🔥
🛡 தமிழகம் முழுவதும் பணியாற்றும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி தலைமைஆசிரியர்களில் மாதம் 82 ஆயிரம் ஊதியம் பெறும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆதாரத்துடன் வெளியிட முடியுமா?

🔥
🛡 கடந்த ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்டதில் மாதம் ரூபாய் நாற்பதாயிரம் ஊதிய உயர்வு பெற்ற ஒரு அரசு ஊழியர், ஆசிரியரையாவது ஆதாரத்துடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கூற முடியுமா?

🔥
🛡 புதியதாக நியமனம் பெறும் தமிழநாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மொத்த ஊதியமே வெறும் ரூ 23,000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை மறைத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 48,000 ஊதியம் வழங்கப்படுவதாக கடந்த 2018 மே மாதம் அறிக்கை வெளியிட்டு வேதனைப்படுத்திய மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து முதலமைச்சரே இவ்வாறு பேசி வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சியிருப்பது எவ்வாறு ஏற்புடையதாகும்?

🔥
🛡 கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தெரியுமா?

🔥
🛡 இப்படிப்பட்ட நிலையில் உண்மைக்கு மாறான செய்தியை மாண்புமிகு முதல்வர் அவர்களே கூறி, பொதுமக்களுக்கு தவறான தகவல்களைக் கூறியதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

*- .மயில்*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments: