கல்வி உரிமைச் சட்டம் - ஏமாற்றங்களும்! நம்பிக்கைகளும்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, April 1, 2024

கல்வி உரிமைச் சட்டம் - ஏமாற்றங்களும்! நம்பிக்கைகளும்!

கல்வி உரிமைச் சட்டம்

ஏமாற்றங்களும்! நம்பிக்கைகளும்!

கல்வி உரிமைச் சட்டம் ஏப்ரல் 1, 2010 -நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டத்தில் இருந்த குறைகள் எவை? சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைகள் எவை? கல்வி உரிமைச் சட்டத்தால் மாற்றங்கள் நடந்தனவா? கல்வி உரிமைகள் முழுமையாக கிடைத்திட என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

தொடக்கக் கல்வியை கட்டண யில்லாமல் கிடைக்க செய்வதுதான் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையான இலக்கு. கடந்த 14 ஆண்டுகளில் கட்டணம் செலுத்தி படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

'ஜனநாயகம் ஒவ்வொரு தலைமுறைக்கும் புதிதாக பிறக்க வேண்டும். கல்வியை ஜனநாயகத்தின் செவித்தாய்'என்ற அமெரிக்க கல்வியாளர் ஜான்டூயி கூறியது. கல்வியின் இன்றைய அடிப்படை நோக்கத்தை தெளிவாகிறது. எனவே தான் மக்களாட்சி அமைப்பில் கல்வி என்பது அரசின் பொறுப்பாகவும் கடமையாகவும் குழந்தைகளின் அடிப்படை உரிமையாகவும் ஏற்கப்பட்டு அனைத்து நாடுகளிலும் அரசியல் அமைப்பு சட்டங்களில் கல்வி முதன்மை கூறாக இணைக்கப்பட்டுள்ளது.

விடுதலைக்குப் பிறகு கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக அறிவித்து 2009-இல் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காலம் கடந்த நிறைவேற்றப்பட்ட சட்டத்திலும் பல ஓட்டைகள் உள்ளன. 

குறைகளோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் பல குறைகள் உள்ளன. குழந்தைகளின் கல்வி உரிமைகளை உறுதி செய்வதில் போதிய அக்கறையும் அரசியல் உறுதி பாடும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இல்லாமல் போனதே இதற்கு காரணம்.

👇👇👇👇👇👇





No comments: