பொதுத்தேர்வு : ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் (11-03-2024) - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, March 11, 2024

பொதுத்தேர்வு : ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் (11-03-2024)

பொதுத்தேர்வு : ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள்

11-03-2024

தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்க் 26- ஆம் தேதி தொடங்க உள்ளது. அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 8- தேதியுடன் நிறைவடைய உள்ளன. நிகழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளை 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 முதல் 13-ஆம் தேதி வரையும் பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 25-ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

அதேபோல், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 12 முதல் 22 ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும். அவை நிறைவடைந்த பிறகு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் பிளஸ் 2, தேர்வு முடிவுகள் மே 6, பிளஸ் 1 முடிவுகள் மே- 14, 10- ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளன.

👇👇👇👇👇



No comments: