இளைஞர் எழுச்சி நாள் - Dr.APJ. அப்துல் கலாம் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொகுப்பு மற்றும் கவிதை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, October 15, 2019

இளைஞர் எழுச்சி நாள் - Dr.APJ. அப்துல் கலாம் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொகுப்பு மற்றும் கவிதை




*பெயர்*:

. பி. ஜே. அப்துல் கலாம்

*பிறப்பு* :

 15-10-1931

*இறப்பு* :

 27-07-2015

*பெற்றோர் :*

 
 ஜெனுலாப்தீன், ஆஷியம்மா

*இடம் :*

 இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா

*புத்தகங்கள் :*

 இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அக்னி சிறகுகள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

*வகித்த பதவி* :

 விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், ஆசிரியர், தொழில்நுட்ப வல்லுநர்

*விருதுகள் :*

 ராமானுஜன் விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, வீர் சவர்கார் விருது


*வாழ்க்கை வரலாறு*

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர் .பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்.
   
*பிறப்பு:*

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜெனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

*இளமைப் பருவம்:*

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
 
*கல்லூரி வாழ்க்கை:*

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ளசெயின்ட் ஜோசப் கல்லூரியில்இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடையவிண்வெளி பொறியியல் படிப்பைசென்னையிலுள்ள எம்..டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 
*விஞ்ஞானியாக .பி.ஜே அப்துல் கலாம்:*

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதானபத்ம பூஷன்விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டுபொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய .பி.ஜே. அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிப்புரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

*குடியரசுத் தலைவராக .பி.ஜே அப்துல் கலாம்:*

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002-ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதானபாரத ரத்னா விருதுமத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், ‘பாரத ரத்னாவிருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர்மக்களின் ஜனாதிபதிஎன்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
 
*மரணம்:*

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
திருவள்ளூர் மாவட்டம்.


No comments: