தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம். அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்படும்.
பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
No comments:
Post a Comment