நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 18, 2018

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்




நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.

 
எலுமிச்சை சாறு மற்றும் தேன்

ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
 

கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

No comments: