தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை -பள்ளிக்கல்வி இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்.
மழைக்காலங்களில் வரக்கூடிய சிக்கன்குனியா, டெங்கு போன்ற நோய்களிலிருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி வளாகங்களில் திறந்த வெளி கிணறு, நீர் தேக்கப்பள்ளங்கள், கழிவுநீர் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகங்களில் விழும் நிலையில் மரம் இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.
கட்டிடங்கள், மேற்கூரைகள், கைப்பிடி பகுதிகள் உறுதியாக உள்ளன என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கல்வி இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்
No comments:
Post a Comment