கனவு ஆசிரியர்' தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, May 16, 2023

கனவு ஆசிரியர்' தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை!

கனவு ஆசிரியர் தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை....

ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டவை. இதை யாரும் மறுக்க முடியாது.
நல்ல நிலத்தில் மண்டி வளரும் களைச் செடியை முளையிலேயே கிள்ளியெறிந்து விடுவது தான் நல்ல விளைச்சலுக்கு அடிப்படை ஆகும். இப்போது வளர விட்டு விட்டு அது பெரிய நச்சை உதிர்க்கும் மரமாகப் பயமுறுத்தும் போது கையறு நிலையில் குய்யோமுறையோ என்று கூச்சலிடுவது என்பது வீண் வேலை. இது தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு ஈடானது.
வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் ஆசிரியர்களுள் சிறந்த கனவு ஆசிரியர்களை அவர் தம் பணிபுரியும் பள்ளிகளுக்கு நேரில் சென்று பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு கற்பித்தலில் புதுமை மற்றும் புத்தாக்கம், மாணவர் எளிய முறையில் இனிதாகக் கற்க கற்றலில் பயன்படுத்தப்பட்ட நவீனத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள், பள்ளி வளர்ச்சியில் ஆற்றிய பங்குகள், சமுதாய மேம்பாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள், தனிமனித ஒழுக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் நேர்வும் தேர்வும் அனைவராலும் ஏற்கத்தக்க ஒன்றாக அமையும். 

இதில் நிச்சயமாக திறமைமிக்க ஆசிரியர் விடுபாடுகள், உள் நோக்க சார்புகள், நம்பகத்தன்மையின்மை நிலைகள், அவநம்பிக்கைகள் முதலிய எதிர்மறை கூறுகள் இடம்பெறுவது பெருமளவு தவிர்க்கப்படும். எனவே, இதுகுறித்து தமிழக அரசு கனிவுடன் நன்கு ஆராய்ந்து திண்ணையில் உட்கார்ந்து இருந்தவனுக்கு திடுதிப்பென்று கல்யாணமாம் என்று சொல்வது போல ஏதோ ஓரிரு தேர்வுகள் எழுதித் தேர்ச்சிப் பெறுவோருக்குக் கனவு ஆசிரியர் விருது வழங்கி மலினப்படுத்தாமல் முறையாக, தக்க தகுதி வாய்ந்த, வெற்று விளம்பரம் மீது மோகம் கொண்டு அலையாத, மாணவர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் ஆர்வமும் ஈடுபாடும் நிறைந்த ஆசிரியர்களுக்கு வழங்க முற்படுவதே சாலச்சிறந்தது என்பது அனைவரின் வேண்டுகோளாகும்.


எழுத்தாளர் மணி கணேசன்  



No comments: