8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, September 14, 2022

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை


8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை திண்டுக்கல் ஆனது Jeep Driver, Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் Tamilnadu Rural Development and Panchayat Raj Department Dindigul

பணியின் பெயர் Jeep Driver, Office Assistant

பணியிடங்கள் 9

விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022

விண்ணப்பிக்கும் முறை Offline


TNRD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Jeep Driver, Office Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – 5 பணியிடங்கள்

Office Assistant – 4 பணியிடங்கள்


TNRD Dindigul கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் LMV Licence வைத்திருப்பது கட்டாயமானதாகும்.


TNRD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


TNRD Dindigul ஊதிய விவரம்:

பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – ரூ. 19,500/- முதல் ரூ.62,000/- வரை

Office Assistant – ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை


TNRD தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification PDF
👇👇👇👇👇👇👇👇



No comments: