அரசாணை 113- ஜாக்டோ ஜியோ போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்ட அரசாணை வெளியீடு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 18, 2021

அரசாணை 113- ஜாக்டோ ஜியோ போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்ட அரசாணை வெளியீடு

அரசாணை 113- ஜாக்டோ ஜியோ போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்ட அரசாணை வெளியீடு


தமிழக அரசு போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உள்ளது..


அரசிற்கு நன்றிகள்...

 

1) போராட்ட கால ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம்.

22/08/2017 (ஒரு நாள் )மற்றும் 2019 ஜனவரி போராட்ட நாட்கள்

 


2) பணிப் பதிவேட்டில் போராட்ட கால பதிவை அடிக்க வேண்டும் என தேவை இல்லை.. பணிக்காலமாக முறைப்படுத்திய தகவலை பதிவு செய்தால் போதுமானது...

 


3) தள்ளிப் போன 2019 ஆண்டு ஊதிய உயர்வு பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம். (சிறு தொகை தான்) இருப்பினும் நமக்கு வரவேண்டியது...

4) தேர்வு நிலை / சிறப்பு நிலை தள்ளிப்போன நிகழ்வில் திருத்திய ஆணை மூலம் பணப்பலன் பெறலாம்...

 


5) 2017 செப்டம்பர் போராட்ட நாள்களில்...

நீதிமன்ற உத்தரவின் படி விடுமுறை நாட்களில் வேலை செய்து விட்டோம்.

அப்போதே ஊதிய பிடித்தம் செய்யப்படவில்லை.

எனவே தற்போது ஊதியம் பெறவேண்டிய தேவை எழவில்லை...

 

6) பணிச் சரிபார்ப்பு பதிவில் (service verification) போராட்ட காலத்தை பணிக் காலமாக கருதப்படும் பதிவை மேற்கொள்ளலாம்...

 DOWNLOAD THE G.O-PDF FILE

 







No comments: