பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட
கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆங்காங்கே
நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை
நேரில் ஆய்வு செய்தார் .
🦚 ஆய்வில், பெண்
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.. மேலும், அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், கற்பித்தலை மேம்படுத்துவதற்குமான ஆலோசனைகளை வழங்கினார் .
🦚 நரிகட்டியூர் ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையின் மகன் ஹர்ஷத்தை, அதே
பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்த
ஆசிரியைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
🦚 பள்ளி வளாகங்களில்
மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி
வைத்தார். கரூரில் உள்ள மாவட்ட
மைய நூலகத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது,
தேவையான வசதிகளைத் தயக்கமின்றி எந்த நேரத்திலும் தன்னிடம்
கேட்குமாறு கூறினார்.
🦚 ஆய்வின் போது கரூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்
No comments:
Post a Comment