மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கட்டு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, April 26, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கட்டு

அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு திடீர் என கைவிரித்து விட்ட தால் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை உடனுக்குடன் அந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது அதேசமயம் அகவிலைப்படி உயர்வு  நிலுவைத்தொகை மத்திய அரசு வழங்க வேண்டியிருந்தது இதனை சேர்த்து வழங்குவதாக முதலில் அரசு தெரிவித்திருந்தது இதனால் மத்திய அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் மொத்தமாக  படி உயர்வு ஒரு குறிப்பிட்ட தொகை வரும் என்ற ஆவலில் எதிர்பார்ப்போடு இருந்து வந்தனர் . நிலையில் கொரோனா உள்ளிட்ட பெரும் பிரச்சினையில் மத்திய அரசு தற்போது திணறி வருகிறது .இந்த சூழ்நிலையில் கொரோனா  தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கைகள் என சுகாதாரத் துறைக்கு பல மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க செய்ய வேண்டி சூழல் தற்போது மத்திய அரசுக்கு  ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .இதனால் திடீரென ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 01.07 2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட ஊதியத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: