தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, April 11, 2021

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!!

🛑தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டில் மீண்டும் பள்ளிகள்

திறக்கப்படும் போது 1 முதல் 5ம் வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரி உள்ளனர்.

 

🛑பள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்காக நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான மாணவர்களுக்கு கண் எரிச்சல், வலி போன்றவை ஏற்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 

🛑அதன் பின்னர் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்


தொடங்கப்பட்டன. படிப்படியாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமெடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

🛑இதனையடுத்து 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வழிக்கல்வி தொடரும் என அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பிற்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கிடையில் கடந்த கல்வியாண்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து விட்டதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



No comments: