2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் வேதனையும் நீங்கா துயரமும்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 25, 2021

2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் வேதனையும் நீங்கா துயரமும்!

2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் வேதனையும் நீங்கா துயரமும்!

 

🔥🔥பாவம் செய்தோர் நாமா? 2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் 😭😭வேதனையும் துக்கமும் கலந்த எதிர்பார்ப்பு!

 

யாராலும் அரசுக்கு உணர்த்த முடியாத உணர்ந்த விரும்பாத மிகப்பெரிய பாதிப்பான 2009 ம் ஆண்டிற்கு பின் பணிநியமனம் பெற்ற இடைநிலை

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை பல கடுமையான உண்ணாவிரதப் போராட்டம் - உயிர்நீர் அருந்தா போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி மாநில அரசுக்குள்ளேயே உள்ள ஊதிய அநீதியை சுமார் 13,000 பாதிப்பை சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை மூலம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் கல்வியாளர்கள் மூலமும் தெளிவாக உணரவைத்து மாநில அரசுக்குள்ளான இந்த ஊதிய முரண்பாடு அவசியம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசும் அதை நன்கு உணர்ந்து  ஏற்றுக்கொண்டு உத்திரவாதமும் அளித்து இதுவரையில் ஊதிய முரண்பாடு களையப்படாத காரணத்தால் பலமுறை அரசின் கவனத்தை ஈர்த்தும் தெளிவாக எடுத்துரைத்தும் இன்று நிறைவேறும் நாளை நிறைவேறும் என்று ஏக்கத்தில் 12 ஆண்டுகளையும் கழித்து ஒரு சிலர் ஓய்வு பெற்ற நிலையிலும் ஒருசிலர் ஓய்வு பெற உள்ள தருவாயிலும் சிலர் மரணித்த தருவாயிலும்

👉(விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு ஆசிரியர்கள் மன உளைச்சலில் மாரடைப்பால் இயற்கை எய்தினர்)

தமது கோரிக்கை தீர்க்கப்படாமல் உள்ளதால் 2009 ஆம் ஆண்டிற்கு பின் இன்றுவரை இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் மனவேதனையிலும் மன உளைச்சலிலும் உள்ளனர்!

 https://www.youtube.com/watch?v=Qqfby0BJqAE&feature=youtu.be


இதனை நினைத்து ஒரு ஆசிரியரின் மகள் எழுதி பாடிய கவிதை வரிகள்

1111111111111111111111111111111111111111111111111111111111111111111

அரசுக்கும் அதிகாரிகளுக்கு சென்றடையும் வரை பகிர்வோம்!


No comments: