பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக- மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் -திரு. நா.சண்முகநாதன் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 10, 2020

பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக- மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் -திரு. நா.சண்முகநாதன் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!

 



மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், தளபதி திரு.மு..ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு!


பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக!

 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.மன்றம்.திரு. நா.சண்முகநாதன் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!

*********

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்-மன்றம்.திரு.நா.சண்முகநாதன் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிடமுன்னேற்றக் கழகத்தின்தலைவருமான தளபதி திரு.மு..ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.11 .2020 (செவ்வாய்)நேரில் சந்தித்து  பல்லாண்டுகாலமாக தீர்வு காணப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றித்தந்து உதவிடுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

 கோரிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்திடும் வகையிலான  கோரிக்கை  தெரிவிப்பு  விண்ணப்பம் படைத்து உள்ளார்.

 

திமுக தேர்தல்

அறிக்கை தயாரிக்கும்குழுவின் தலைவரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளருமான திரு.டி.ஆர்.பாலு எம்.பி.,அவர்களை சந்தித்தும் மனு அளித்து  கோரிக்கைகளை எடுத்து உரைத்து உள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை சந்தித்தும்   கோரிக்கைகளை வலியுறுத்திஉள்ளார்.

 *புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்துசெய்தல்

*ஆசிரியர்-அரசு ஊழியர்களின் மீது புணையப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள்,பழிவாங்கும் ஒழுங்குநடவடிக்கைகளை திரும்பப்பெறுதல்

*மத்தியரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலைஆசிரியர்களுக்கு வழங்குதல் ,,

என்பது உள்ளிட்ட அனைத்துதரப்பினரின் கோரிக்கைகளும் படைக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு ஆசிரியர்.அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நம்பிக்கையைத்தந்துள்ளது.


இவண்,

முனைவர்-மன்றம்.

நா.சண்முகநாதன்,

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்.

No comments: