உயர் கல்வி படிக்க அனுமதி கோரிய 75000 ஆசிரியர்கள் கோப்புக்கள் மாயம்-ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 2, 2020

உயர் கல்வி படிக்க அனுமதி கோரிய 75000 ஆசிரியர்கள் கோப்புக்கள் மாயம்-ஆசிரியர்கள் குற்றச்சாட்டு


திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி இணை இயக்குனர் JD p அலுவலகத்திற்கு விண்ணப்பித்ததில் முன் அனுமதி வழங்கியது போக மீதமுள்ள 2016 முதல் நிலுவையில் உள்ள முன்னனுமதி பற்றி இன்று பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் 

மதிப்புமிகு பொன்னையா அவர்களை பொதுச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சந்தித்து  எடுத்துக் கூறினோம்..

 இணை இயக்குனர் அலுவலகத்தில் முறையாக ஆசிரியர்களின் முன்னனுமதி தரப்பட்டது போக மீதமுள்ள முன் அனுமதியை ஆய்வு செய்த பின், முறையாக அனுமதி வழங்குவதாக கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக கொடுத்த கடிதத்திற்கு பொதுச் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்

No comments: