17 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 23, 2020

17 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று

SOURCE- DINAMANI-

புணேவில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 17 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்படடுள்ளது.

புணேவில் பள்ளி திறக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவின் புணே நகரில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் புணேவில் 5,671 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பணியாளர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

No comments: