Income Tax Info:-பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 14, 2020

Income Tax Info:-பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!



Income Tax Info:

பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!

 அன்வான்ஸ் வரி கட்டாமல் பிப்ரவரி மாதத்தில் ஒரே முறை வரி செலுத்தும் அரசு ஊழிருக்கு,1092 section 234C ன்படி தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

 மாதச் சம்பளம் பெறுவார்கள் ஏப்ரல் முதல் ஜனவரி வரை மாதாமாதம் வருமான வரி முன் பணம் செலுத்தி வருகின்றனர்.

 பிப்ரவரி மாதம் சம்பளத்தில் வருமான வரி கணக்கிட்டு எஞ்சிய தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

 மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று 4 முறை quarter file செய்யப்படுகிறது.

 ஆனால் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வருமான வரி செலுத்துவோருக்கு ஒருமுறை மட்டுமே quarter file செய்யப்படுகிறது.

 இவ்வாறு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் அபராதம் விதிக்கப்படவில்லை.

ஆனால் தற்போது அவ்வாறு மொத்தமாக செலுத்தினால் 1092 section 234C ன்படி அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது.

 இவ்வாண்டு ஏற்கனவே இரண்டு காலாண்டுகள் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் 2020 மூன்றாவது காலாண்டு துவங்கியுள்ளது.

 இதுவரை அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்தாத,இந்த ஆண்டு வருமான வரி செலுத்த வேண்டிய தேவையுள்ளோர் போதுமான வருமானவரி அட்வான்ஸ் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கும் அவசியம் சம்பளத்தில் செலுத்துங்கள்.

தாங்கள் ஒரே தவணையில் வருமான வரி கட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

No comments: