டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 6 பேர் கைது! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, October 11, 2020

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 6 பேர் கைது!

                                          


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 6 பேரை சி.பி.சி..டி போலீசார் கைது செய்தனர். கைது  செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கிடப்பில் கிடந்ததாகப் புகார் எழுந்ததால் 15 நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.சி..டி. வட்டார தகவல் கூறுகின்றன.

இதனிடையே, ராமநாதபுரத்தில் குரூப் 2 தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சிப் பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்ட மாலாதேவி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


No comments: