அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 15, 2020

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்


How the Independence Day 2020 function will be different from ...
விடுதலை விழியில் இமைச்சிறை..!
...........................................
இமை திறந்தால் தான்
பார்வைக்கு விடுதலை!
இசை பிறந்தால் தான்
பாட்டுக்கு விடுதலை!
சுமை குறைந்தால் தான்
முதுகுக்கு விடுதலை!
சுடர் எரிந்தால் தான்
இருட்டுக்கு விடுதலை!

வானவில் நுழைந்தால்தான்
வண்ணங்களுக்கு விடுதலை!
வாதம் செய்து
ஜெயித்தால் தான்
எண்ணங்களுக்கு விடுதலை!
எழுதுகோல் 
குனிந்தால் தான்
எழுத்துக்கு விடுதலை!
எதிர்கால வருகைதான்
நிகழ்கால விடுதலை!

மழையாக வந்தால்தான்
நீருக்கு விடுதலை!
மண்நுழைந்து போனால்தான்
வேருக்கு விடுதலை!
அலையாக 
எழுந்தால் தான்
கடலுக்கு விடுதலை!
அஞ்சல் பெட்டி
பிரிந்தால் தான்
மடலுக்கு விடுதலை!

சிரிப்பதற்கு 
விரிந்தால் தான்
உதட்டுக்கு விடுதலை!
சிறு உளியால்
திறந்தால் தான்
சிலையதற்கு விடுதலை!
சாதி விட்டு
 நகர்ந்தால் தான்
சமத்துவத்தின் விடுதலை!
சாதித்து நீ 
எழுந்தால் தான்
சரித்திரத்தின் விடுதலை!

காம்பு விட்டு
கழிந்தால்தான்
பூக்களுக்கு விடுதலை!
கண்ணை விட்டு
வழிந்தால்தான்
கண்ணீருக்கும் விடுதலை!
கன்னத்தில் 
விழுந்தால் தான்
முத்தத்தின் விடுதலை!
காதலித்து அழுந்தால்தான்
கவிதைக்கு விடுதலை!

ஓய்வின்றி 
உழைத்தால் தான்
உன் கஷ்டம் விடுதலை!
உலகத்தைப்
படித்தால்தான்
உன் அறிவின் விடுதலை!
பணத்தாசை 
ஒழிந்தால் தான்
பண்புநலம் விடுதலை!
பதவி வெறி 
மடிந்தால்தான்
அன்புநெறி 
விடுதலை!

இலைமேலே
நின்றால்தான்
பனித்துளியின் விடுதலை!
இயற்கையோடு
இணைந்தால் தான்
இதயத்திற்கு விடுதலை!
கலைமேவும் காட்சியெல்லாம்
கருத்துக்கு விடுதலை!
கற்பு நெறி மட்டும்தான்
கலாச்சார விடுதலை!

அயல்மொழியை
விரட்டினால்தான்
அன்னைமொழி விடுதலை!
வயல்வெளியை
விரும்பினால் தான்
வறுமைக்கு விடுதலை!
சிறகுகளை 
விரித்தால் தான்
சிகரத்திற்கே விடுதலை!
சிரித்துக்கொண்டே இருந்தால்தான்
சிரமம் விட்டு விடுதலை!

தாய்மடி தான்! 
தாய்மடி தான்!
தலையாய விடுதலை!

விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

         - கவிஞர் கீரை பிரபாகரன்.


No comments: