சிறந்த நுால்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 31, 2020

சிறந்த நுால்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு





சென்னை : சிறந்த தமிழ் நுால்களுக்கான பரிசுப் போட்டிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வர் உத்தரவின்படி, சிறந்த தமிழ் நுால் களுக்கான பரிசுப் போட்டிக்கு, 2019 ஜன., 1 முதல், டிச., 31 வரை வெளியிடப்பட்ட நுால்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. போட்டியில், ஒவ்வொரு வகைப்பாட்டிலும், ஒரு நுால் மட்டும் தேர்வு செய்யப்படும். நுாலாசிரியருக்கு, 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய், பரிசுகள் வழங்கப்படும்.மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், தமிழாக்க நுால்கள் உட்பட, 33 வகைப்பாடுகளின் கீழ், நுால்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, சென்னை, எழும்பூரில் உள்ள, தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, தபாலிலோ பெற்றுக் கொள்ளலாம். அல்லது, www.tamilvalarchithurai.com என்ற, இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

No comments: