Budget 2020 - மத்திய பட்ஜெட் முக்கிய சிறப்பம்சங்கள் ( Live update ) - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, February 1, 2020

Budget 2020 - மத்திய பட்ஜெட் முக்கிய சிறப்பம்சங்கள் ( Live update )


Image result for budjet2020


நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான ( 2020 - 2021 ) மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2020 - முக்கிய சிறப்பம்சங்கள் :

கல்வித்துறை
 
கல்விக்கு ரூ.99,300 கோடி நிதி ஒதுக்கீடு

புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் தனியாருடன் இண்ந்து மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை

கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.

ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் பெண் குழந்தைகள் அதிகமாக சேர்ப்பு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன்

வருமான வரி சலுகை

Soon....

பிற துறைகளுக்கு

உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது

இந்திய அரசின் அன்னிய கடன் மொத்த உற்பத்தி மதிப்பில் 48.7 சதவீதமாக குறைந்துள்ளது

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காகும்

விவசாய வளர்ச்சிக்கு 16 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும்

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய பம்ப் செட்டுகள் மற்றும் வறண்ட நிலங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டம்
 

அனைவரும் சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது பட்ஜெட்டின் குறிக்கோள்

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது

விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகப்படுத்தப்படும்

கிராமங்களில் உணவு தானி சேமிப்பு கிடங்குகள் அமைக்க திட்டம்

மகளிர் சுய உதவி குழுக்கள் முத்ரா திட்டத்தின் மூலம் சேமிப்பு கிடங்குகளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்

நபார்டு மூலமாக நிதி உதவி அளித்து கிராமங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும்

விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு

தான்ய லக்ஷ்மி திட்டம் - விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்த ஊக்கப்படுத்தும் திட்டம் அறிவிப்பு

தேவைக்கு ஏற்ப உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்

2021-ல் 108 மில்லியன் மெட்ரிக் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2025-க்குள் கால் நடைகளை தாக்கும் கோமாரி நோய் ஒழிக்கப்படும்
 
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு

150 உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்

ஊரக மேம்பாடு, நீர்பாசனம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

கல்விக்கு ரூ.99,300 கோடி நிதி ஒதுக்கீடு

திறன் மேம்பாட்டுக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு

சுகாதாரத்திற்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

அரசு - தனியார் பங்களிப்புடன் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்

தேசிய போலீஸ் பல்கலை கழகம் அமைக்கப்படும்

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி

மருத்துவ மின் உபகரணங்களை உற்பத்தி செய்பவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்

2025-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை

மொபைல் போன், செமி கண்டக்டர் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

5 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்
 
ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி மையமாக்கப்படும்

தொழிலதிபர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்க தனி ஏற்பாடு

முதலீட்டுக்கு விரைந்து அனுமதி அளிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் ரூ.103 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்

27,000 கிலோ மீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்படும்

சென்னை - பெங்களூரு வரைவு சாலை திட்டம்

ரூ.18,600 கோடியில் பெங்களூரு புறநகர் ரயில் போக்குவரத்து

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு கடந்த ஆண்டைவிட இந்த பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்கீடு

ரயில்பாதை ஓரங்களில் சூரிய மின்சக்தி திட்டம் பரிசீலிக்கப்படும்

ரயில் நிலையங்களில் வை-பை இணைய சேவை

2024-க்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்படும்

போக்குவரத்து கட்டமைப்புக்காக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு

தேஜஸ் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

150 ரயில்கள் தனியார் மயம் ஒப்படைக்கப்படும்

ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இணையதள வசதி

பாரத் நெட் இணையதள இணைப்பு திட்டத்துக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு
 
கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் ஒரு லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும்

ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு

பெண்கள் நலனுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு

ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் பெண் குழந்தைகள் அதிகமாக சேர்ப்பு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன்

ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்

No comments: