திருவண்ணாமலை CEO - மனதை நெகிழவைக்கும் செயல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, June 22, 2019

திருவண்ணாமலை CEO - மனதை நெகிழவைக்கும் செயல்



Image may contain: 1 person, smiling

பள்ளிகளில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது,பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களுக்கு செய்ய வேண்டியவை என ஒரு பெரிய பட்டியல் நீளும்.பெண் அதிகாரியாய் இருப்பின் ஒரு பட்டியலும்,ஆண் அதிகாரி எனில் இன்னொரு பட்டியலும் ஆசிரியர் கூட்டத்தில் முந்தின நாள் வாசிக்கப்படும்.விரும்பியோ விரும்பாமலோ தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதை செய்தாக வேண்டும்.இல்லை எனில் திட்டு விழும் என்ற பயத்தில் அதை செய்வர்.

இந்த காட்சிக்கு மாறாக,
முதன் முறையாக ஒரு உயர் அதிகாரி,தன் பதவியை எந்த அளவுக்கு நேர்மறையாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கல்வி முன்னேற்றத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.தன் பதவியை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை. இதை மக்கள் எவ்வளவு ரசிக்கின்றனர் என்பதற்கு, நேற்று வைரலாய் பரவிய திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.திரு.ஜெயக்குமார் அவர்கள் சாலையோர பூங்காவில் உணவு உண்ணும் நிழற்பட காட்சியே சாட்சி!

மிகவும் பெருமைப்பட வைக்கிறது.இது போன்ற உயர் அதிகாரிகள் தான் நாட்டின் தூண்கள். கல்வி வளர்ச்சிக்கு இன்னும் இன்னும் பல ஜெயக்குமார்கள் தேவைப்படுகின்றனர்.வீண் பந்தா இல்லாமல், கல்விக்காக மட்டும் தன் பதவியை பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகளை வாழ்த்தி,வளர்ப்பதில் பெருமிதம் கொள்கிறது திருவண்ணாமலை!

No comments: