பெற்றோர் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண்' - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, April 1, 2019

பெற்றோர் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண்'



*லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க செய்யும் முயற்சியில், தேர்தல்ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது

*இதற்கு வலுசேர்க்கும் வகையில், கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, நுாதன திட்டத்தை அறிவித்துள்ளன

*கர்நாடக மாநிலத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியரின் பெற்றோர் ஓட்டு போட்டால், பிள்ளைகளுக்கு தனியாக நான்கு மதிப்பெண் வழங்கப்படும்; குலுக்கல் முறையில் பரிசும் அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
 
*லோக்சபா தேர்தல் நடக்கும் சந்தர்ப்பத்தில், கோடை விடுமுறை உள்ளதால், பலரும் சுற்றுலா அல்லது சொந்த ஊருக்கு செல்வர்

*இதனால் ஓட்டு சதவீதம் குறையும்.எனவே, மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்கள் ஓட்டு போட்டால், பிள்ளைகளுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, இந்த வித்தியாசமான திட்டத்தை அறிவித்து உள்ளது

*கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர், சசிகுமார் அளித்த பேட்டி:தாய், தந்தை இருவரும் ஓட்டு போட்டால், அவர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி தேர்வில் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களுடன், நான்குகூடுதல் மதிப்பெண் சேர்க்கப்படும்

*பெற்றோர் ஓட்டுப்போட்டதை, ஓட்டுச்சாவடியில் வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று தெரிவிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் இது பொருந்தும்.தேர்தலுக்கு பின், தேர்வு முடிவு வெளியானால், கூடுதல் மதிப்பெண் தரப்படும்

*ஒருவேளை தேர்தலுக்கு முன்பே, தேர்வு முடிவு வெளியானால், அடுத்த கல்வியாண்டில் நான்கு மதிப்பெண் பெறலாம்.கூடுதல் மதிப்பெண் தருவதுடன்,ஓட்டு போடும் பெற்றோரின் பெயரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: