17.12.2018 ஓய்வூதியர் உரிமை நாள். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 16, 2018

17.12.2018 ஓய்வூதியர் உரிமை நாள்.


 Image result for ஓய்வூதியர் உரிமை நாள்.


17.12.1982 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநாள்.

ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள்.

ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமை.

ஓய்வூதியம் என்பது கருணை அல்ல.

ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் நீண்டகால பணிக்கு வழங்கப்படும் கொடுபடா ஊதியம்.

ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் சமூக பொருளாதார பாதுகாப்பு.
 
ஆகவே, நண்பர்களே
பெற்ற உரிமையை பாதுகாப்போம்.

ஒன்றுபட்ட போராட்டத்தால்...

வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்போம்.
 
போராட்ட வாழ்த்துகளுடன்
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ஓய்வூதியர் தின நல்வாழ்த்துகள்

*டிசம்பர் 17 ஓய்வூதியர் தினம்* (Pensioners’ Day)

அரசுத் துறைகளில் பணி புரிந்த பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் என தீர்ப்பளித்துள்ளது.
இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களை பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14- மீறுவதாகும்.

அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும். அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

No comments: