அஞ்சல் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்க அழைப்பு...*_ - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, November 10, 2018

அஞ்சல் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்க அழைப்பு...*_


  Image result for post office
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்

உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: M.V. Mechanic (Skilled) - 06
பதவி: Copper & Tinsmith (Skilled) - 02
பதவி: M.V. Electrician (Skilled) - 01
பதவி: Tyreman (Skilled) - 02

*💰சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200.*

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: 8 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

*விண்ணப்பிக்கும் முறை:* www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Manager, Mail Motor Service, No.37, (Old No.16/1), Greams
Road, Chennai – 600 006.”

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/SkilledArtisan.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2018

No comments: