சிறப்பாசியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை - செங்கோட்டையன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 9, 2018

சிறப்பாசியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை - செங்கோட்டையன்





சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
 
அப்போது, சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் ஏதும் இருந்தால், அவற்றை விசாரித்து தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும், இதே காலஅவகாசத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

No comments: