பர்சனல் லோனா... தெறித்து ஓடும் அளவிற்கு என்ன ஆபத்து இருக்கு? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 3, 2018

பர்சனல் லோனா... தெறித்து ஓடும் அளவிற்கு என்ன ஆபத்து இருக்கு?



இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி என அனைத்து வங்கிகளும் பெரும்பாலும், தனி நபர் கடனை வழங்குகின்றன. மக்களுக்கும் தனி நபர் வாங்க வங்கிகளை அணுகத் துவங்கி விட்டனர். தனி நபர் கடன் கவனிக்க வேண்டியவை: 1. கடன் கேட்டு விண்ணப்பம் செய்வதற்கு முன் உங்கள் தகுதியை தீர்மானித்து கொள்ளுங்கள். 2. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. தனிநபர் கடன்கள்தான் வராக்கடன்களாக உயர்ந்துள்ளதாம். 3. தனி நபர் கடன்களின் மீது 11 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை வட்டியை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. 4. முன்கூடியே கடனை செலுத்தும் போது கூட வட்டி விகிதத்தை கவனிக்க வேண்டும். ஏனெனில் கடனை திரும்ப செலுத்தக்கூட வட்டி போடப்படுமாம்.
 
எப்போது தனி நபர் கடன் ஆபத்தாகிறது? 1. தனி நபர் கடனாக பெற்ற பணத்தினைப் பங்கு சந்தை அல்லது பிற ரிஸ்க் முதலீடுகளை செய்யும் போது, 2. சொந்த பிஸ்னஸ், வீடு, வாகனம் வாங்க தனிநபர் கடனை வாங்கும் போது, 3. விருப்பாமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக தனிநபர் கடன் வாங்குவது, 4. பிறரின் தேவைக்காக உங்களது பெயரில் தனி நபர் கடன் பெற்று கொடுப்பது, ஆகியவற்றின் போது தனி நபர் கடன் ஆபத்தில் சென்று முடியக்கூடும்.

No comments: