டெல்லி அரசின் இணையதளத்தில் இருந்து ஆதார் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்துள்ள அதிகாரிகள் அவற்றை உடனே நீக்கும்படி, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்களைப் பற்றிய தனிப்பட்ட எந்த விபரத்தையும், அரசுத்துறையின் இணையதளத்தில் அதிகாரிகள் பதிவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது.
டெல்லி மாநில தகவல் தொழில்நுட்பத்துறை சிறப்பு செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைத்து துறை முதன்மை செயலர்கள், செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் ஆதார் எண், மொபைல் போன் எண் உட்பட தங்களது தனிப்பட்ட விபரங்களை துறையின் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளனர். அவற்றை உடனடியாக நீக்கி விட வேண்டும். மேலும், அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட விபரத்தை, அரசின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment