முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 16, 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு



சென்னை: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார். நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்த வாஜ்பாய் 


தனது 93வது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மாலை 5.5 மணிக்கு வாஜ்பாய் காலமானார். வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.


No comments: