நவ. 27 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 20, 2018

நவ. 27 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்


திருவாரூர்: ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட
உள்ளோம் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் . மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து திருவாரூரில் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது


ஆனால், தமிழக முதல்வா், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் குறித்தும், தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து செப். 9-ஆம் தேதி சிறுவிடுப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ. 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியா்கள் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்

No comments: