தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது - தமிழக அரசு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 22, 2018

தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது - தமிழக அரசு



தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.
நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி பார்வை செய்தார்.


முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு விரைவில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.


No comments: