கூடாது... கூடாது... 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற கோர்ட் உத்தரவின் படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம்.
பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 2 ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது, மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மாநில அரசுகளுக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விசாரணையை அக். 24 க்கு ஒத்தி வைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment