School Morning Prayer Activities - 25.07.2019 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, July 24, 2019

School Morning Prayer Activities - 25.07.2019


Prepared by

Covai women ICT_போதிமரம்Image result for morning prayer

இன்றைய செய்திகள்

25.07.2019

மருத்துவக் கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மாதம் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை.

பல்வேறு பிரச்சினைகள்நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் க்ரோட்ரான் (Grotron) என்னும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த பெஞ்சமின் ராஜா(42).  துல்லிய விவசாயமும்புதிய தொழில்நுட்பமும் விவசாயத்தை லாபமீட்டும் தொழிலாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இவர்.

தமிழகத்தில் பொறியியல் முதுலைப் படிப்பில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் சாய் பிரனீத்.

சீனாவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டிமதுரை மாணவி ஜெர்லின் அனிகா தங்கம் வென்று அசத்தல்.

திருக்குறள்


அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

விளக்கம்:

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

பழமொழி

No man can serve two masters

ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2. இயற்கை சமநிலை பேணிபாதுகாப்பேன். அதற்காக என் பங்களிப்பை செலுத்துவேன்.

பொன்மொழி

ஒருவன் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு இரு கடமைகள் உள்ளன. அவை சுயநம்பிக்கை மற்றும் தொழில் பக்தி....
சுயநம்பிக்கை இல்லாதவன் தொழில்மேல்  பற்றற்றவன் ஆவான் ..


 
-------விவேகானந்தர்

பொது அறிவு

1. இந்தியாவில் பருத்தி நெசவாலைகள் அதிகம் உள்ள மாநிலம் எது ?

மகாராஷ்டிரா.

2. இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

வர்கீஸ் குரியன்(பால்பண்ணை மேம்பாட்டுத் திட்ட வடிவமைப்பாளர், இவரது சொந்த ஊர் கோழிக்கோடு, கேரளா)

English words & meanings

* Indigo plant - a plant gives blue dye. அவுரி செடி
1. இந்தியாவில் கிடைக்கும் செடி என்று இண்டிகா என்று பெயர் பெற்றது.
2. கருநீல வண்ண சாயம் இதிலிருந்து பெறப்படுகிறது.

* Impala - a wild animal in the family of deer. கிளைகள் அற்ற கொம்பு உடைய மான்
1. ஆப்பிரிக்காவில் காணக்கூடியது
2. 2 மீட்டர் உயரம் குதிக்க கூடியது.

ஆரோக்ய வாழ்வு

வெண்டைக்காய் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கும் ஏற்றது.

Some important  abbreviations for students

RJQ - Return Journey Quota

RLWL-  Running Line Waiting List
(Railway)

நீதிக்கதை

"ஊருக்கு வந்திருந்த தாத்தா, தினமும் மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு பேரன் அகிலேஷுக்கும் பேத்தி அவந்திகாவுக்கும் கதைகள் சொல்வார். அன்று சேமிப்பு பற்றி ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டதும், ‘‘இனிமே நாங்களும் அப்பா, அம்மா கொடுக்கிற காசுல சேமிக்கிறோம்’’ என்றாள் அவந்திகா.

‘‘நாளைக்கே உண்டியல் வாங்கித் தரேன்’’ என்றார் தாத்தா.


 
மறுநாள் உண்டியலுடன் வந்த தாத்தாவைப் பார்த்தும், ‘‘என்ன தாத்தா இது? மண் உண்டியல். சூப்பர் மார்கெட்ல அழகழகா கார்ட்டூன் உண்டியல் இருக்கு தெரியுமா’’ என்றான் அகிலேஷ்.

 அதெல்லாம் பார்க்க மட்டும்தான் அழகு. இந்த மண் உண்டியல் சுற்றுச்சூழலுக்கும் அழகு. உடைஞ்சாலும் மண்ணோடு மண்ணாகும்’’ என்றார்.

புரிந்துகொண்ட இருவரும் மண் உண்டியலை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர்..
மாணவர்களே இந்த அவந்திகா மற்றும் அகிலேஷ் போல நீங்களும் எதை செய்தாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த காரியங்களே செய்ய வேண்டும்.

வியாழன்

 அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

அறிவியல் மேஜிக்: தண்ணீரில் மிதக்கும் ஊசி!

கொசுக்களும் ஈக்களும் தண்ணீரில் சாதாரணமாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? தண்ணீரில் அவை மூழ்காமல் எப்படி நிற்கின்றன? ஒரு சோதனை செய்து பார்த்து விடுவோமா?

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர்

மெல்லிய காகிதம் (டிஷ்யூ பேப்பர்)

ஊசி 2( ஜம்ப் கிளிப் )

எப்படிச் செய்வது?





 


# கண்ணாடி டம்ளரின் விளிம்புவரை தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.

# ஓர் ஊசியை எடுத்து தண்ணீரில் போடுங்கள். ஊசி என்ன ஆனது? தண்ணீரில் மூழ்கிவிட்டதா?

# சரி விடுங்கள், இப்போது ஒரு துண்டு டிஷ்யூ பேப்பரைக் கிழித்து தண்ணீரில் போடுங்கள்.

# டிஷ்யூ பேப்பர் மீது இன்னோர் ஊசியை வையுங்கள்.

# சற்று நேரத்தில் டிஷ்யூ பேப்பர் நீரில் நனைந்துவிடும். நனைந்த பேப்பரைச் சிறிய குச்சியால் தண்ணீருக்குள் தள்ளிவிடுங்கள்.

(ஊசி மீது குச்சிப் படக் கூடாது.)

# பேப்பர் தண்ணீருக்குள் சென்ற பிறகு ஊசி மட்டும் மிதப்பதைப் பார்க்கலாம்.

காரணம்

நீரின் பரப்பு இழுவிசையே ஊசி மிதந்ததற்குக் காரணம். நீர்மத்தின் ஓரலகுப் பரப்பில் உணரப்படும் விசையே பரப்பு இழுவிசை.
ஒரு நீர்மத்தின் உட்பகுதியில் உள்ள மூலக்கூறுகள் மற்ற எல்லா மூலக்கூறுகளாலும் எல்லாத் திசையிலும் சமமாக இழுக்கப்படுகின்றன. இதனால் நீர்மப்பரப்பில் இறுக்கம் உணரப்படுகிறது.

இந்த இறுக்கத்தினால் மூலக்கூறுகள் தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து சிறிய படலமாகப் படிந்துவிடுகின்றன. இதனால், ஊசி மிதக்கிறது.

கணினி சூழ் உலகு

அலைபேசியின் screen மடிக்கணினியில் reflect செய்து இயக்க உதவும் இரு செயலிகள் பற்றிய காணொலி




Today's Headlines

* States that do not handle medical waste need to pay Rs 1 crore per month: National Green Tribunal warning.

* Benjamin Raja, from Coimbatore invented a new technology Grotron which will transform agriculture into a profitable industry.

* Applications for admission to the Engineering Post Graduate Entrance Examination in Tamil Nadu have started from yesterday.

* Japan Open Badminton: Sai Praneeth of India qualifies for 2nd round.

* Badminton Competition for the Deaf in China: Madurai student Jerlyn Anika wins gold.


No comments: