பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 18, 2019

பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



கல்லூரி கல்வி இயக்குநர் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் நேற்றுவெளி யிட்ட அறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர்களின் மேற் படிப்புக்காக திறன் அடிப்படை யிலான உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு உதவித்தொகைக்கு விண் ணப்பித்து தேர்வுசெய்யப்பட்ட வர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உதவித் தொகைதொடர்பான மத்திய அர சின் வழிகாட்டு நெறிமுறை களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments: