தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, January 21, 2019

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


Image result for ஒரே கல்விமுறை


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் இனி ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வி தொடர்பாக ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், சேலம் மாவட்டம் மாதையன் குட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 3,000 அரசு பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகள் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்படும்.
 
அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் .

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம். 12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றார்.

No comments: