குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் 'யெஸ் சார்', 'பிரசன்ட் சார்' என்பதற்கு பதில், 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும் என மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில ஆரம்ப கல்வித்துறை, மேல்நிலை, உயர்நிலைத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: குஜராத் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வருகைப்பதிவேடு எடுக்கும்போது, 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்து தேசப்பற்றை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த உத்தரவு
பிறப்பிக்கபடுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக முதல் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment