தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 31, 2018

தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்


Image result for pension


 *தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இன்னும் வெளியிடப் படவில்லயென நிதித் துறை பதில் வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு*
 
*பழைய ஓய்வூதிய திட்டத்தில், (GPF/TPF) தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு*

*1. மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம்,*

*2. பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின் கணவன் () மனைவிக்கு மாதந்தோறும் குடும்பஓய்வூதியம்,*

*3. விருப்ப ஓய்வூதியம்,*

*4.இயலாமை ஓய்வூதியம்,*

*5.ஈடுகட்டும் () இழப்பீட்டு ஓய்வூதியம்,*

*6. கட்டாய ஓய்வூதியம்,*

*7. இரக்க ஓய்வூதியம்*
 
என்னும் ஓய்வு பெறும் தன்மைக்கு ஏற்ப 7 வகையான
ஓய்வூதியம் நடைமுறையில் *தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.*

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த *திரு.ஜெயப்பிரகாஷ் என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்,* தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமெனதமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை எண் () நாளை குறிப்பிடவும்மேலும் இந்த அரசாணையின் நகலை வழங்கவும். என்று தமிழக அரசின் நிதித் துறைக்கு 20.11.2018 நாளிட்ட மனுவில் வரிசை எண் 1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன் கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடித எண்.61444/நிதி (PGC-1)/2018 நாள்:14.12.2018 என்ற கடிதத்தில்

*மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை.  என பதில் வழங்கப்பட்டுள்ளது.*

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்பஓய்வூதியம்விருப்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம் ஈடுகட்டும்()இழப்பீட்டு
ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம் மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும் 7
வகையான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு இன்னும் அரசாணை வெளியிடவில்லை.
 
அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

இவண்
.சி.ஜெயப்பிரகாஷ்
.நி..
அரூர் ஒன்றியம்
தருமபுரி மாவட்டம்.
 


No comments: