வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, December 21, 2018

வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது.


*கிராமப்புற பள்ளிகளில், 'நெட்வொர்க்', பிரச்னையால், மாணவர்களின்
வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி

மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன.
 

*அரசு பள்ளி மாணவர்களின் வருகையை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் நடைமுறை செப்., மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது.


*வகுப்பு ஆசிரியர்கள், அவர்களது, 'ஆன்ட்ராய்ட்', மொபைல்போனில், வருகை பதிவு செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், மாணவர்கள் வருகையை பதிவிட வேண்டும்.

*கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், 'ஆன்ட்ராய்ட்' மொபைல்கள் வைத்திருந்தாலும், 'நெட்வொர்க்' பிரச்னையால், பலரும் சாதாரண 'மொபைல்போன்'களை பயன்படுத்துகின்றனர்.
*தற்போது, கல்வித்துறை உத்தரவால், 'நெட்வொர்க்', இல்லாத பள்ளிகளில், 'ஆன்லைன்' வருகை பதிவுக்கு ஆசிரியர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.


*பள்ளிகள் அமைந்திருக்கும் கிராமங்களில், 'நெட்வொர்க்', இருக்கும் இடங்களுக்கு சென்று, செயலியில், வருகையை பதிவேற்றம் செய்கின்றனர்.


*இப்பிரச்னை இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வேறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.


*வீட்டில் 'ஆன்லைன்' செயலியை துவக்கிக்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன் வருகை பதிவு செய்துகொள்ளலாம்.

*மீண்டும் 'நெட்வொர்க்', உள்ள இடத்துக்கு செல்லும்போது வருகைப்பதிவை தானாக பதிவாகிவிடும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

 *ஆனால், பலரும் இதனை முயற்சி செய்தும், நேரம் மாறி காட்டுவதாகவும், சில நாட்களில், பதிவு ஆகாமல் போய்விடுவதாகவும் ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.தற்போது, கல்வித்துறை 'ஆன்லைன்' வருகைப் பதிவை தீவிரமாக கண்காணிக்கிறது.

*இப்பிரச்னையால் வருகைப்பதிவு, இப்பதிவை செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை தொடர்ந்து கல்வித்துறை பட்டியலிடுகிறது.

*இத்தகைய வருகை பதிவு செய்வதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணாமல் கல்வித்துறை பள்ளி நிர்வாகங்களை புகார் கூறுவதால், ஆசிரியர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

No comments: