துபாயில் ஆசிரியர் பணி : விண்ணப்பிக்க அழைப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, October 23, 2018

துபாயில் ஆசிரியர் பணி : விண்ணப்பிக்க அழைப்பு



சென்னை: துபாயில் உள்ள முன்னணி கல்வி நிறுவனம் ஒன்றில், காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களுக்கு, தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:துபாயில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு முதல்வர், மேற்பார்வையாளர், மழலையர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைவர், பெண் இஸ்லாமிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கு, ஆங்கில வழியில் படித்து, சி.பி.எஸ்.சி., பள்ளியில் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.;
கல்வித்தகுதி, பணி சம்பந்தப்பட்ட விபரங்களை,www.omcmanpower.comஎன்ற வலைதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். தகுதிக்கேற்ப, 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.தகுதியானோர், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படம் ஆகியவற்றை,omcresum@gmail.comஎன்ற, - - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு, 044 - 2250 5886, 2250 2267 தொலைபேசி எண்கள், 82206 34389, 95662 39685 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE-
http://www.dinamalar.com/news_detail.asp?id=2129511

No comments: