புயல் வருவதைக் குறிக்க, கடலோரத்தில் ஏற்றப்படும் எச்சரிக்கைக் கூண்டுகளுக்கு என்ன அர்த்தம். அது எதனுடைய தீவிரத்தைக் குறிக்கும்? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 25, 2018

புயல் வருவதைக் குறிக்க, கடலோரத்தில் ஏற்றப்படும் எச்சரிக்கைக் கூண்டுகளுக்கு என்ன அர்த்தம். அது எதனுடைய தீவிரத்தைக் குறிக்கும்?


துறைமுகங்களின் கொடிமரத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். 1ம் எண்ணிலிருந்து 11ம் எண் வரை எச்சரிக்கைக் கூண்டுகள் உள்ளன. புயலின் தீவிரம், எந்தத் திசையில் கடக்கும் என்பன குறித்து, அந்தந்தத் துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
1ம் எண்: புயல் உருவாகக்கூடிய வானிலை ஏற்பட்டு, ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், வரும் நாட்களில் எச்சரிக்கையாகச் செயல்பட இந்த எச்சரிக்கை.

2ம் எண்: துறைமுகத்துக்கு அருகே புயல் உருவாகியுள்ளது.

3ம் எண்: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலை ஏற்படலாம்.

4ம் எண்: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம்.

5ம் எண்: துறைமுகத்தின் இடப்பக்கமாக, புயல் கரையைக் கடக்கும்.

6ம் எண்: துறைமுகத்தின் வலப்பக்கமாக, புயல் கரையைக் கடக்கும்.

7ம் எண்: கடுமையான புயல் துறைமுகப் பகுதியைத் தாக்கும்.

8ம் எண்: தீவிர புயல் துறைமுகத்தின் இடப்பக்கமாகக் கரையைக் கடக்கும்.

9ம் எண்: தீவிர புயல் துறைமுகத்தின் வலப்பக்கமாகக் கரையைக் கடக்கும்.

10ம் எண்: நேரடியாக துறைமுகம் அருகே தீவிர புயல் கரையை கடக்கப் போகிறது.

11ம் எண்: வானிலை எச்சரிக்கை மையத்துடன் தகவல் தொடர்பற்று, தீவிர புயல் எந்தத் திசையில் செல்லும் என்பது தெரியாத நிலை.

No comments: