திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டு கவிதை - திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் திரு. கா.சந்திரசேகர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 25, 2018

திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டு கவிதை - திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் திரு. கா.சந்திரசேகர்




_*திரு.உதயச்சந்திரன் ..எஸ்*_

*கல்வித்துறையின்*
*கலங்கரை விளக்கம்*
*நீங்கள்!*

*புத்தகத்தில்*
*புதுமையைப்*
*புகுத்திய*
*புத்திசாலி*
*புண்ணியவான்*
*நீங்கள்!*

*வாசிப்பை*
*நேசிக்க வைத்த*
*மாசற்ற*
*மாணிக்கம்*
*நீங்கள்!*

*ஆசிரியர்களை*
*அரவணைத்து*
*அழகாய்*
*வழிநடத்திய*
*அன்புள்ளம்*
*அமைந்தவர்*
*நீங்கள்!*

*மாணவர்களின்*
*மனங்களிலும்*
*சிம்மாசனமிட்ட*
*மாண்புடையவர்*
*நீங்கள்!*

*கல்வித்துறையில்*
*கால்பதித்து*
*காலமெல்லாம்*
*உங்கள் பெயரை*
*உச்சரிக்க*
*வைத்ததைப் போல...*

*தொல்லியல்*
*துறையினிலும்*
*தோண்டல்கள்*
*பலசெய்து*
*கல்வெட்டின்*
*எழுத்தினைப் போல்*
*தங்கள் பெயர்*
*தரணியெங்கும்*
*நிலைத்திருக்கச்*
*செய்திடுங்கள்!*

*உதயமாகும் சந்திரனாக*
*உங்களின்*
*அன்பொளி வீசி*
*வல்லமை பெறட்டும்*
*தொல்லியல் துறை!*
 
💐💐🙏🙏🙏💐💐
*என்றும் அன்புடன்....*
_*கா.சந்திரசேகர்*_,
_*தமிழாசிரியர்*_,
_*வடமதுரை*_,
_*திண்டுக்கல் மாவட்டம்*_.

No comments: